ஆப்நகரம்

ரஜினி என்ன அரசியல்வாதியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டம்

ரஜினிகாந்த் சொல்வது போல் தமிழக அரசியலில் வெற்றிடம் என எதுவும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 11 Nov 2019, 8:00 pm
கோவை: தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நேற்று முன்தினம் திறந்து வைத்தனர்.

அதன்பின்னர் தனது இல்லத்துக்கு திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்றார். ராஜினியின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுதியது.

வெற்றிடத்தை மக்கள் தான் நிரப்ப முடியும்: ரஜினிக்கு பிரேமலதா பதில்

ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டு ஆட்சியை இழந்திருந்தால் வெற்றிடம் ஏற்பட்டிருக்கும். அப்படி இருந்தால் ரஜினி சொல்வது சரியா இருந்திருக்கும். ஆனால், அப்படி இல்லை என்றார். அதேபோல், ரஜினியின் கருத்துக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக அரசியலில் வெற்றிடம் இருந்தது. ஆனால், அதனை ஸ்டாலின் நிரப்பி விட்டார் என்றார்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு: ரஜினி சொன்னது என்ன?

இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ரஜினியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது. ரஜினி சொல்வது போல் அரசியலில் வெற்றிடம் என எதுவும் இல்லை. ரஜினி என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர் அவர் சொல்வதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன என்றார்.

அதிமுகவில் இணையும் அமமுக அதிருப்தியாளர் புகழேந்தி

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்த முதல்வர், நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்றார். அமமுக அதிருப்தியாளர் புகழேந்தி அதிமுகவில் இணைவது தொடர்பாக கடிதம் அளித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அப்போது முதல்வர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி