ஆப்நகரம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் சேலத்தில் காலமானார்

Samayam Tamil 13 Oct 2020, 1:49 am
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் கடந்த சில நாட்களாக சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் சிகிச்சை பலனின்றி சேலம் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93. முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து, அம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட சென்ற முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் மறிவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்துள்ளார்.

பேரறிவாளன் தந்தை கோவை மருத்துவமனையில் அனுமதி: நாளை அறுவை சிகிச்சை!

தீவிரமான அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும், அவ்வப்போது சொந்த கிராமத்திற்கு சென்று தனது தாயாரை அக்கறையுடன் பார்த்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தாயார் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி