ஆப்நகரம்

தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரம் : இப்படியொரு கருத்தை சொன்ன முதல்வர்!!

தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் அமைக்கப்பட வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல; அது அவரவர் கருத்து என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Aug 2020, 12:07 pm
கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
Samayam Tamil edappadi


அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, " ஹிந்தியை மூன்றாவது மொழியாக குறிப்பிட்டு, கோவை மாநகராட்சி பள்ளியில் வெளியான விண்ணப்பம் போலியானது. போலியான விண்ணப்பத்தை தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் அமைக்கப்பட வேண்டும் என்பது அரசின கருத்தல்ல. அது அவரவரின் சொந்த கருத்து" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் 2ஆவது தலைநகர் எது? அதிமுக அமைச்சர்கள் லடாய்!

தமிழகத்தில் இரண்டாவது தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் அண்மையில் கூறியிருந்தனர்.

அவர்களுக்கு பதிலடி தரும்விதத்தில், "எம்ஜிஆரின் எண்ணப்படி திருச்சியை இரண்டாவது தலைநகராக அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்திருந்தார்.

இரண்டாவது தலைநகரை விஷயத்தை முன்வைத்து, ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி