ஆப்நகரம்

2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி ஆணை

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்பந்த பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

Samayam Tamil 8 May 2020, 3:42 pm
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்கள் பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil எடப்படி பழனிசாமி
எடப்படி பழனிசாமி


கொள்ளை நோயான கொரோனா கொத்து கொத்தாக உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில், கடுமையான இடர்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும், பாதிப்பு அதிகமாக இருப்பதால் இவர்களது தேவையும் அதிகளவில் உள்ளது.

எனவே, மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் 530 மருத்துவர்கள், 2323 செவிலியர்கள்,1508 தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் 2715 சுகாதார ஆய்வாளர்களை கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசு ஏற்கனவே நியமித்துள்ளது. ஓய்வு பெறும் மருத்துவர், செவிலியர்களின் பணி காலமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

Vizag Gas leak: எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனத்துக்கு 50 கோடி ரூபாய் அபராதம்

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் 2570 ஒப்பந்த செவிலியர்களை 6 மாதங்களுக்கு பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு உத்தரவு


மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 40 செவிலியர்கள். தாலுகா மருத்துவமனைகளுக்கு தேவைக்கேற்ப 10 முதல் 30 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி