ஆப்நகரம்

தில்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பிரதமர் மோடியை சந்திக்கும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைநகர் தில்லி சென்றடைந்தார்.

TNN 26 Feb 2017, 11:14 pm
புதுதில்லி: பிரதமர் மோடியை சந்திக்கும் பொருட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைநகர் தில்லி சென்றடைந்தார்.
Samayam Tamil tn cm edappadi palanisamy reached delhi
தில்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி


தமிழக முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை நாளை சந்திக்கவுள்ளார். அதற்காக இன்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அவர் தில்லி சென்றடைந்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்பின் போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது. தமிழகத்துக்கு உடனடியாக வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தவுள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.
TN CM Edappadi palanisamy reached delhi

அடுத்த செய்தி