ஆப்நகரம்

இலவச மின்சாரம்: மத்திய அரசை எதிர்க்கும் முதல்வர் பழனிசாமி

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசு முடிவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 May 2020, 1:34 pm
மின்சார சட்டத்திருத்த மசோதா மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் அதனால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தி பத்து நாள்களுக்கு முன்னதாக கடிதம் ஒன்றை அனுப்பினார்.
Samayam Tamil மத்திய அரசை எதிர்க்கும் முதல்வர் பழனிசாமி


மின்சார சட்டத் திருத்த மசோதா மாநில அரசின் சில உரிமைகளைப் பறித்துவிடும் என்று முதல்வர் ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இந்த சட்டத்திருத்த மசோதா, மின்விநியோகம் முழுவதையும் தனியார்மயமாக்குதல் போன்ற திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது. பொதுமக்கள் நலனுக்கு எதிரானதாக உள்ளது என்றும் முதல்வர் ஏற்கெனவே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக மற்றொரு கடிதத்தையும் எழுதியுள்ளார். அதில், “விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும் முடிவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உம்பன் புயலால் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது என்ன?

விவசாயிகளுக்கான மானிய மின்சாரம் தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா: நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழ்நாட்டின் நிலை இதுதான்!

மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சீர்திருத்தங்களை உடனடியாக கைவிட வேண்டும் என பிரதமர் மின்சாரத் துறைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி