ஆப்நகரம்

மேச்சேரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றம்: முதலமைச்சர்

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கான கூட்டு குடிநீர் திட்டம், போக்குவரத்து வசதி என பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு முதல்வர் அடிகல் நாட்டியுள்ளார்.

TNN 9 Oct 2017, 10:54 am
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கான கூட்டு குடிநீர் திட்டம், போக்குவரத்து வசதி என பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு முதல்வர் அடிகல் நாட்டியுள்ளார்.
Samayam Tamil tn cm inaugurate salem mecheri joint drinking water project
மேச்சேரி கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றம்: முதலமைச்சர்


சேலம் வனவாசி பகுதியில் நடைப்பெற்ற விழா ஒன்றில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது:
வன்வாசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பால்டெக்னிக் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க 10.6 ஏக்கர் பரப்பில் கல்வி நிலையம் சூழல் உருவாக்கி கொடுத்துள்ளோம்.

அதே பொல்ல அயோத்திப்பட்டினம், ராமலிங்க அரசு உயர்நிலைப் பள்ளி கட்ட 30.56 கோடி ஒதுக்கி அடிகல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் பேருந்து வசதி வேண்டும் என கேட்டீர்களோ அங்கெல்லாம் இயக்கியாகிவிட்டது. சாலைகள் விரிவு படுத்தி விட்டோம்.

தேர்தல் நேரத்தில் இப்பகுதிக்கு வரும் போது கடும் குடிநீர் பிரச்னை நிலவியது. அதை போக்க ஜெயலலிதா மேச்சேரி வட்டம், நங்கவள்ளி வட்டம் ஆகிய இரண்டிற்கும் சேர்த்து கூட்டு குடிநீர் திட்டம் 158 கோடி செலவில் நிறைவேற்ற தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு குடிநீர் தீட்டத்தின் மூலம் காவிரி நீர் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கும்.

ஜலகண்டா புரத்தில் உள்ள ஏரியில் கழிவு நீர் சேருகிறது. அதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அங்கு கழிவு நீர் சுத்திகரிக்கும் கருவியை நிறுவ நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என முதல்வர் பேசியுள்ளார்.

அடுத்த செய்தி