ஆப்நகரம்

அதிமுகவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

அதிமுகவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TNN 22 Nov 2016, 5:02 pm
சென்னை: அதிமுகவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil tn cm jayalalitha says thanks to people for giving victory in bypolls
அதிமுகவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி


தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முதலமைச்சர் ஜெயலலிதா, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்காக பிரார்த்தனை செய்து வரும் மக்களின் பேரன்பை என்றும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 3 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தனது அன்பு கட்டளையை ஏற்று பணியாற்றிய அதிமுகவினருக்கு ஜெயலலிதா நன்றி கூறியுள்ளார். இதன்மூலம் மக்கள் தன் பக்கம் உள்ளது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் தேறி வரும் நிலையில், எல்லையில்லா மகிழ்ச்சி, உற்சாகம் அடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

TN CM Jayalalitha says thanks to people for giving victory in bypolls.

அடுத்த செய்தி