ஆப்நகரம்

மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் , இதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்தர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

TNN 14 Mar 2016, 2:56 pm
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் , இதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்தர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil tn cm jayalalitha writes letter to prime minister modi
மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு ஜெ., கடிதம்


இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடித்தத்தில்,ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் 28 பேர் உட்பட ஏற்கன்வே இலங்கைச் சிறையிலுள்ள 96 மீனவர்கள் மற்றும் அவர்களது 82 படகுகளையும் விடுவிக்க வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி