ஆப்நகரம்

மரக்கன்று நடுவதற்கு 192 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக 192 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Feb 2019, 11:48 am
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்காக 192 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil tree planting cm


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு இந்த ஆண்டு 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துவக்க விழா சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள பாரதிதாசன் சிலை அருகே நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி மகிழம் மரக்கன்றை நட்டு 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக 192 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலாளர், வனத்துறை அமைச்சர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளன்று அவரது பிறந்தநாள் கணக்கின் ஏற்ப மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 4.61 கோடி அளவில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த வருடத்துக்குள்ளாக 71 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வனத்துறை மட்டுமில்லாது வனத்துறை இல்லாத மற்ற அமைப்புகள் மூலமும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி