ஆப்நகரம்

எதிர்க்கட்சிகள் போராட்டம்: ஆளுநரை சந்தித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்!

நாளை எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 4 Apr 2018, 8:18 pm
நாளை எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.
Samayam Tamil cm.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு கடந்த மாதம் மார்ச் 29ம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நாளை நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.

முழு அடைப்பு போராட்டம்: உயரதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!
இந்த நிலையில், இதன் எதிரொளியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார். நாங்கள் கூறிய பதில் அவருக்கு திருப்திகரமாக இருந்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவிரி விவகாரம்: அதிமுகவின் உண்ணும் விரதமா?

அடுத்த செய்தி