ஆப்நகரம்

மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.17ஆயிரம் கோடி தேவை : முதல்வர் பேட்டி

பிரதமர் நநேந்திர மோடியுடனான சந்திப்பில் ,மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.17ஆயிரம் கோடி தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

TNN 24 May 2017, 1:20 pm
சென்னை : பிரதமர் நநேந்திர மோடியுடனான சந்திப்பில் ,மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.17ஆயிரம் கோடி தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
Samayam Tamil tn cm meets pm
மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.17ஆயிரம் கோடி தேவை : முதல்வர் பேட்டி


பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், " நீட் தேர்வில் தமிழகத்தில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை உடனடியாக வழங்க காப்பீடு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

காவிரி படுகையின் புரணமைப்பு பணிகளுக்காக 14, 500 கோடி ரூபாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஓப்புதளித்து நிதி ஓதுக்க வேண்டும். கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். பம்பா , வைப்பாறு உபரி நீர் தமிழகத்திற்கு திருப்பிவிட கேரளா அரசை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்

குடிமராமத்து திட்டபணிக்களுக்கு 500 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு திட்டத்திற்கான நிலுவையில் உள்ள 17ஆயிரம் கோடி தொகையை உடனே விடுக்க வேண்டும். இலங்கை கட்டுபாட்டில் இருக்கும் மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை தமிழக அரசு அலுவலங்களில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் எம்ஜியார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்துள்ளேன். என்று முதல்வர் கூறினார்.

tn cm meets pm

அடுத்த செய்தி