கடலூர் சிப்காட்டில் கிரிம்ஸன் ஆர்கானிக் பிரைவட் லிமிடெட் என்ற ரசாயனத் தயாரிப்பு செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை இந்த நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி ராஜ்குமார் (45), கணபதி (25), சவீதா(35), விசோஸ்ராஜ்(26) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 13 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறை சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து குறித்துத் தகவலறிந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த விபத்து குறித்து கடலூர் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் தனியார் ஆலையில் பாய்லர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் மற்றும் படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறை சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்து குறித்துத் தகவலறிந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த விபத்து குறித்து கடலூர் சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் தனியார் ஆலையில் பாய்லர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம் மற்றும் படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.