ஆப்நகரம்

கனமழை எச்சரிக்கை: முதல்வர் நடத்தும் ஆலோசனை!

கனமழை எச்சரிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Samayam Tamil 24 Nov 2021, 8:52 am
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Samayam Tamil mk stalin meeting


தமிழ்நாட்டில் இந்த நவம்பர் மாதம் வழக்கத்துக்கு மாறாக கனமழை அடித்து வாங்குகிறது. சென்னையில் நவம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது. சுரங்கப்பாதைகள் மழை வெள்ளத்தால் நிரம்பி போக்குவரத்து ஸ்தம்பித்தது. டெல்டா மாவட்டங்களும், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களும் அதிக சேதமடைந்தன.

கடந்த வாரம் பெய்த தமிழகத்தில் கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம், கடலூர், ராணிபேட்டை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன.
தமிழக வெள்ள நிவாரணம் 5000 ரூ: ஸ்டாலின் எடுக்கும் முக்கிய முடிவு என்ன?
சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி இன்னும் நிறைவடையவில்லை. இந்த சூழலில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யலாம்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சசிகலாவை சேர்க்கலாமா? அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் நாளை நவம்பர் 25ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஆளுநரைச் சந்தித்த ஓபிஎஸ்: எடப்பாடிக்கு கொடுத்த ஷாக்!
தமிழக கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் நிலையில் மழை அளவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு சார்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்க உள்ளது.

அடுத்த செய்தி