ஆப்நகரம்

கனிமொழியை குஷிப்படுத்திய ஸ்டாலின் - சர்ப்ரைஸ் விசிட்!

கலைஞரின் சிஐடி காலனி இல்லத்துக்கு ஸ்டாலின் சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்.

Samayam Tamil 7 May 2021, 1:43 pm
முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த மு.க.ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
Samayam Tamil Kanimozhi


கொரோனா நிவாரணம், பால் விலை குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சேவை,முதல்வர் காப்பீட்டு கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும், 100 நாள்களில் வாக்குறுதிகள் நிறைவேற்ற உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் என ஐந்து திட்டங்களை தொடங்கிவைத்தார் ஸ்டாலின்.

அதன்பின் தலைமைச் செயலகத்திலிருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், நேராக சிஐடி காலனியில் உள்ள கலைஞர் வீட்டுக்கு சென்றார். அங்கு ராஜாத்தி அம்மாளிடம் ஸ்டாலின் ஆசீர்வாதம் பெற்றார்.
முதல்வர் நாற்காலியில் ஸ்டாலின்: மே மாதம் 2000 ரூ, பால் விலை குறைப்பு!
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் சிஐடி காலனி இல்லத்துக்கு ஸ்டாலின் செல்லவில்லையே என்ற பேச்சு எழுந்தது, இதனால்தான் கனிமொழி சைலண்டாக உள்ளார் என்றும் பேசப்பட்டது. ஆனால் கனிமொழியோ தனது மகன் ஆதித்யாவுடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்திற்கு புதிய விடியலை தர பதவியேற்றுள்ள தளபதி அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். வாக்களித்த பெருமக்களுக்கும் வெற்றிக்கு அயராது உழைத்த கழகத்தினர் தோழமை கட்சியினருக்கும் நன்றி. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்தினை இந்திய நாட்டின் முதன்மை மாநிலமாக முன்னெடுத்து செல்வோம்” என வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டார்.
ஷாக் நியூஸ்: தமிழகத்தில் முழு ஊரடங்கா? 74 ரயில்கள் ரத்து!
இந்நிலையில் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து கிளம்பியதும் நேராக சிஐடி காலனி இல்லம் சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றது கனிமொழிக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.

முன்னதாக அழகிரியையும் ஸ்டாலின் பதவியேற்பு விழாவுக்கு அழைத்தது கவனம் பெற்றது. அழகிரி மகன் துரை தயாநிதி நிகழ்வில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி