ஆப்நகரம்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பேற்க மீண்டும் வலியுறுத்தல்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.

TNN 11 Dec 2016, 12:52 pm
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து ஆலோசனை நடத்தினார்.
Samayam Tamil tn cm o panneerselvam meets sasikala
சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பேற்க மீண்டும் வலியுறுத்தல்


தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் கார்ட்னில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அம்மா பேரவையின் தலைமையை ஏற்று வழிநடத்துமாறு ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் கோரியதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது நீண்டகால தோழியான சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று வழிநடத்த வேண்டும் என்று மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் அழைப்பு விடுத்துள்ளனர். அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வெளியாக நிலையில், முதல்வரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்த்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி