ஆப்நகரம்

டெல்லி சென்றடைந்தார் ஓ.பி.எஸ்:மாலை பிரதமரை சந்திக்கிறார்..!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றடைந்தார்.இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

TNN 19 Dec 2016, 9:47 am
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றடைந்தார்.இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
Samayam Tamil tn cm ops reached delhiwill meet pm at 5 pm
டெல்லி சென்றடைந்தார் ஓ.பி.எஸ்:மாலை பிரதமரை சந்திக்கிறார்..!


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பதற்காக நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்.இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார்.ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றதும் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது மட்டுமின்றி,ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் உயரிய விருதான ”பாரத ரத்னா” வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை தமிழக ஆளுநரை சந்தித்த தமிழக முதல்வர், இன்று அதிகாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கிளம்பினார்.காலை 9.30 மணிக்கு டெல்லியை சென்றடைந்த அவர்,அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.பிரதமர் மோடியை மாலை 5.10 மணி அளவில் தமிழக முதல்வர் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என பிரதமரிடம் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைப்பார் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் வார்தா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமரிடம் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்துவார் எனவும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN CM OPS reached Delhi,will meet Pm at 5 PM

அடுத்த செய்தி