ஆப்நகரம்

இனி உலகம் அறியும் தமிழரின் வரலாற்றை, கீழடி மியூசியம்!

தமிழர்களின் நாகரிகம்தான் மிகவும் பழமையானது என்பதை நிரூபிக்கும் வகையில் கீழடி கண்டெடுப்புகள் விளங்குகிறது.

Samayam Tamil 20 Jul 2020, 12:27 pm
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ரூ. 12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான அடிக்கல்லை முதல்வர் பழனிசாமி வீடியோ கால் மூலம் நாட்டுகிறார்.
Samayam Tamil இனி உலகம் அறிந்து கொள்ளும் தமிழரின் வரலாற்றை, கீழடி மியூசியம்!
இனி உலகம் கொள்ளும் தமிழரின் வரலாற்றை, கீழடி !


கீழடியில் மத்திய, மாநில அரசுகள் மூலம் 5 கட்ட அகழாய்வுப் பணி நடந்து முடிந்தது. இந்த ஆராய்ச்சிகளில் தொன்மையான நாகரிகத்தைத் தமிழர்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்தது.

நாகரிகத்தின் உச்சம் எனச் சொல்லப்படும் 3 விதமான கட்டுமான வழிகளையும் 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகம் கொண்டிருந்தது எனத் தரவுகள் உறுதி செய்துள்ளது. அதேபோல் வர்த்தகம் உள்ளிட்டவையும் நடந்ததற்கான சான்றுகளும் கீழடியில் கிடைத்தது.

குறிப்பாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களில் எழுத்துக்கள் காணப்பட்டது. இது அப்போதைய நேரத்தில் வாழ்ந்த மக்களின் எழுத்து அறிவை உறுதிப்படுத்துவதாக இருந்தது. ஆய்வாளர்கள் கூறுகையில், “கீழடி சமூகம் சமத்துவத்தைப் பின்பற்றி வந்துள்ளது. பெரும்பாலோனோர் சான்றோர்களாக இருந்துள்ளனர்” என்கின்றனர்.

எனினும், இங்குக் கிடைத்த பொருட்களைப் பாதுகாக்க இடமில்லாமல் வெளிமாநிலங்களுக்கு அகழ்வாராய்ச்சி துறை கொண்டு சென்றது. இது குறித்துக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோன தமிழர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின் மூலம், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாட்டில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி... சில கட்டுப்பாடுகளுடன்!

இதை ஏற்றுத் தமிழ்நாடு அரசு விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றது. அதன்படி தமிழ்நாடு முதல்வர் பழனிசாமி வீடியோ கால் மூலம் கீழடியில் அருங்காட்சியகம் தொடங்க அடிக்கல் நாட்டினால். இதற்காக ரூ. 12 கோடியே 25 லட்சத்தைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.

கீழடியில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கீழடி அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளிலும் இந்த அகழாய்வு பணிகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. இப்போது மனித எலும்புகள், குழந்தை எலும்புகள் முதுமக்கள் தாழிகள் ஆய்வின் மூலம் கிடைத்து வருகின்றன.

அடுத்த செய்தி