கொரோனா தொற்று காரணமாகப் பிரபல தனியார் தொலைக்காட்சி மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் இன்று உயிரிழந்தார். இவரது பிரிவு பத்திரிகையாளர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பல தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்முருகன் வேண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் நேற்று வரை முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்திரிகைத் துறையில் நல்ல பெயரைப் பெற்றிருந்த வேல்முருகன் மறைவு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்படப் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உயிரிழந்த வேல்முருகனின் மனைவி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 12வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
ஊடகத்தில் முதல் பலி..! 'ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தாங்க'...
வேல்முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவித் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் எனத் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் பத்திரிகையாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டு முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு அங்கிகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவச் செலவை அரசு ஏற்கும் என்றும் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தால், அவர் வாரிசுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, வேல்முருகன் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இந்த அரசு பத்திரிகையாளர்கள் நலனில் எப்போது அக்கறை கொண்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேல்முருகன் வேண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் நேற்று வரை முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்திரிகைத் துறையில் நல்ல பெயரைப் பெற்றிருந்த வேல்முருகன் மறைவு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்படப் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உயிரிழந்த வேல்முருகனின் மனைவி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 12வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
ஊடகத்தில் முதல் பலி..! 'ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தாங்க'...
வேல்முருகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு உதவித் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் எனத் தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் பத்திரிகையாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டு முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு அங்கிகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரின் மருத்துவச் செலவை அரசு ஏற்கும் என்றும் சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தால், அவர் வாரிசுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, வேல்முருகன் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இந்த அரசு பத்திரிகையாளர்கள் நலனில் எப்போது அக்கறை கொண்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.