ஆப்நகரம்

ஜெயலலிதா வழியில் எடப்பாடி; மாற்றத்திற்கு இடமே இல்லை - அமைச்சர் உதயகுமார் திட்டவட்டம்!

சென்னை: ஜெயலலிதாவின் இடத்தில் பழனிசாமியை பார்ப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Oct 2018, 8:19 pm
முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் நிறைவு விழாவில் வரும் 22ஆம் தேதி மதுரையில் மகளிர் சைக்கிள் பேரணியை நடத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
Samayam Tamil Udhayakumar


இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, டிடிவி அணியைச் சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன் வதந்தி ஒன்றை பரப்பி வருகிறார். அதாவது எடப்பாடியை நீக்கினால், தாங்கள் அதிமுகவில் இணைந்து விடுவோம் என்று.

யார் இவர்களை அழைத்தது? கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட உரிமையில்லை. ஜெயலலிதா வழியில் நலத்திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.

ஜெயலலிதாவின் இடத்தில் எடப்பாடியை வைத்துப் பார்க்கிறோம் என்றார். சபரிமலை விவகாரத்தில் மரபு காப்பாற்றப்பட வேண்டும் என்பதே தனிப்பட்ட கருத்து. பெண்களுக்கு சம உரிமை என்பது குறித்து நான் போகவில்லை என்று உதயகுமார் கூறினார்.

TN CM Palaniswami is in Jayalalitha place says Minister Udhayakumar.

அடுத்த செய்தி