ஆப்நகரம்

தெற்காசியாவில் சேலத்திற்கு இப்படியொரு பெருமை; வாரிக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.

Samayam Tamil 9 Feb 2020, 11:53 am
சேலத்தை மாவட்டத்தை சேர்ந்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தனது மாவட்டத்திற்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறார். அந்த பட்டியலில் சமீபத்திய ஒன்றாக சேர்ந்திருப்பது ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ஆகும்.
Samayam Tamil Palaniswami


இது ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் அமையவுள்ளது. 1,080 ஏக்கரில் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தெற்காசியாவிலேயே மிகவும் பிரம்மாண்ட கால்நடை பூங்கா என்ற சிறப்பை பெறவுள்ளது.

முதல்கட்டமாக ரூ.396 கோடி ஒதுக்கீடு செய்து, அதில் ரூ.82 கோடி கால்நடை மருத்துவ உயர்கல்வி கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் கால்நடை கல்லூரி செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அடேங்கப்பா! பிரம்மாண்ட கால்நடை பூங்காவால் இவ்வளவு நன்மைகளா?- தலைவாசலில் இன்று அடிக்கல்!

இதில் எம்.வி.எஸ்.சி, எம்.டெக், பி.எச்டி உள்ளிட்ட படிப்புகள் உலக தரத்தில் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு. முதலாண்டில் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மட்டுமல்லாது பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளன.

அதாவது பால் பொருட்கள் உற்பத்தி, பதப்படுத்துதல், இறைச்சி பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும். இங்கு அமையவுள்ள ஆராய்ச்சி மையம் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அவருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அதிகாலை பரபரப்பு; நடந்தது என்ன?- அதிரடியாக புதுக்கோட்டை மத்திய சிறைக்குள் போலீசார்!

இன்று முதல் மூன்று நாட்களுக்கு பெருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருத்தரங்குகள், கால்நடை பயிற்சி வகுப்புகள் குறித்த விழிப்புணர்வு, கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள் அதிகளவில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

அடுத்த செய்தி