ஆப்நகரம்

தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம்; செவிசாய்ப்பாரா பிரதமர் மோடி!

சென்னையில் அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை அமைக்க பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 25 Sep 2020, 11:39 am
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், சித்தா, ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, உனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த சூழலில் அனைத்திந்திய சித்த மருத்துவ கழகத்தை மத்திய அரசு ஏற்படுத்தப் போவதாக அறிந்தேன். இத்தகைய முடிவை எடுத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் சித்த மருத்துவ கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
Samayam Tamil Modi and Palaniswami


அதுவும் நடப்பு நிதியாண்டிலேயே நிறுவ வேண்டும். சித்த மருத்துவம் தோன்றிய தமிழக மண்ணில் அதற்கான நிறுவனம் கட்டமைக்கப்படுவது மேலும் சிறப்புக்குரியது. இதற்கான உரிய நிலத்தை தமிழக அரசு ஏற்படுத்தி தர தயாராக உள்ளது.

குஜராத்தில் தமிழ்ப் பள்ளிக்கு சிக்கல்; களத்தில் இறங்கிய தமிழக முதல்வர்!

அதாவது வான்வழியாக, ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும் வகையிலான இடம் அளிக்கப்படும். இதற்காக சென்னைக்கு அருகே சரியான இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம்.
பிரதமருக்கு கடிதம்
இதுதொடர்பாக மத்திய அரசு கோரும் அனைத்து விவரங்களையும் அளிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உரிய விவரங்கள் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம். தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம் கட்டமைக்கப்படும் என்று மிகவும் ஆர்வமாக உள்ளேன். இதற்கு சாதகமான பதிலை மத்திய அரசு அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி