ஆப்நகரம்

சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சென்னை திரும்பினார்.

TNN 24 Apr 2017, 4:10 am
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சென்னை திரும்பினார்.
Samayam Tamil tn cm reaches chennai after participating niti aayog
சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி


மத்திய திட்டக் கமிஷனுக்கு பதில் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியும் கலந்து கொண்டார்.

இதற்காக டெல்லி சென்ற முதல்வர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை சந்தித்தார். அப்போது, அவர்கள் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்துவதாக உறுதியளித்த முதல்வர், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதேபோல், தங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை எனில், டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ந்து, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி, நீட் உட்பட பொதுத் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும், இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 133 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தை முடித்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.
TN CM reaches chennai after participating Niti Aayog

அடுத்த செய்தி