ஆப்நகரம்

போராட்டத்தை கைவிடுங்க; ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு முதல்வர் வேண்டுகோள்...!

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை கைவிட முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 4 Sep 2017, 8:14 pm
சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை கைவிட முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil tn cm requests jacto jiya protest
போராட்டத்தை கைவிடுங்க; ஜாக்டோ-ஜியோ அமைப்பிற்கு முதல்வர் வேண்டுகோள்...!


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஊதிய விகிதம் திருத்தியமைப்பது, இடைக்கால நிவாரணம் வழங்குவது, காலமுறை ஊதியத்திற்குப் பதில் முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் குறித்து, இதற்கென அமைக்கப்பட்ட ஊதியக் குழு பரிசீலித்து வருகிறது.

இக்குழு இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும், இதில் மேலும் காலதாமதம் ஏற்படாது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு உரிய முடிவுகளை எடுக்குமென்றும், அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும், அதன் தற்போதைய நிலை குறித்தும் தெளிவாக விளக்கி, ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இந்த அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ள காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

TN CM requests Jacto Jiya protest.

அடுத்த செய்தி