ஆப்நகரம்

புயல் வேகத்தில் நடைபெற்ற மீட்புப் பணி: முதல்வர் பெருமிதம்!

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Samayam Tamil 28 Nov 2020, 12:45 pm
நிவர் புயல் தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி வந்து கரையைக் கடந்து கடும் மழையைக் கொடுத்து தற்போது வலுவிழந்துள்ளது. மீண்டும் வங்கக் கடலில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil nivar cyclone


கஜா புயலுக்கு இணையான வீரியத்துடன் புயல் வந்திருந்தாலும் ஓப்பீட்டளவில் இம்முறை குறைவான பாதிப்பே ஏற்பட்டது. மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதனால் குறைவான சேதமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி இது குறித்து பேசியுள்ளார். அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளி காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்!

அப்போது அவர் , “தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு புயல் பாதிப்பை தவிர்த்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தில் இம்முறை எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களின் சிறப்பான பணியால் தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் துவக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி