ஆப்நகரம்

சபாநாயகரை திடீரென்று சந்தித்த காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள்!

தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் பிரச்னைகள் குறித்து விவாதம் செய்ய சட்டமன்றத்தை கூட்டுமாறு காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள், சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 3 Dec 2018, 10:49 pm
தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் பிரச்னைகள் குறித்து விவாதம் செய்ய சட்டமன்றத்தை கூட்டுமாறு காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள், சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil dhanapal


தமிழகத்தில் கடந்த 16ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. அப்போது டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்றது. அதன் தாக்கம் இன்னும் சீரடையவில்லை. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் கண்ணீரும் கவலையுமாய் உள்ளனர். அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலைகள் செய்யும் அவல சம்பவமும் அரங்கேறி வருகிறது.

இது தவிர தமிழக அரசின் எதிர்ப்பையும் மீற மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு வரைவு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இன்று திடீரென்று சபாநாயகர் தனபாலை சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள், கஜா புயல் உட்பட தமிழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்னைகள் நிலவி வருவதாகவும், இது குறித்து உரிய விவாதம் செய்ய சட்டப்பேரவையை கூட்டுமாறும் வலியுறுத்தினர்.

அடுத்த செய்தி