ஆப்நகரம்

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சகோதரர் கொலை செய்தாரா? தேனியில் பரபரப்பு

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜாவின் ஓட்டுநராக பணியாற்றி வந்த முனியாண்டி என்பவர் உயிரிசந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு ராஜாதான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

Samayam Tamil 17 Feb 2020, 3:26 pm
தேனி: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா, தனது கணவரை கொலை செய்து விட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்


தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி(45). இவருக்கு ஜெயா என்ற மனைவியும் முகேஷ் என்ற மகனு, மோனிஷா என்ற மகளும் உள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், ஆவின் கூட்டுறவு சங்க தலைவருமான ராஜாவின் தோட்டத்தில் விவசாய பணிக்காக டிராக்டர் ஓட்டுவது மற்றும் வாகனங்கள் ஓட்டும் ஓட்டுநராக முனியாண்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு சென்ற முனியாண்டி இறந்து விட்டதாக மதியம் 2 மணியளவில் அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் சென்று பார்த்தபோது அங்கு பிணவறையில் முனியாண்டி சடலமாக கிடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருவாடானை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர் மர்ம மரணம்!

இதையடுத்து, ராஜாவின் தரப்பினர் முனியாண்டியின் குடும்பத்தாருக்கு எந்தவித உரிய பதிலும் அளிக்காமல் மவுனம் சாதித்தால் ஆத்திரமடைந்த முனியாண்டி குடும்பத்தினர், தேனி - வீரபாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை: ‘பட்டாக் கத்தியாலதான் கேக் வெட்டுவோம்’ - ரௌடி கும்பலை தூக்கிய போலீஸார்!

தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும், ராஜா தனது கணவர் முனியாண்டியை அடித்து கொலை செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள முனியாண்டியின் மனைவி, தனது கணவர் இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்காமல் விடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.


அதேசமயம், தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது டிராக்டர் கவிழ்ந்து முனியாண்டி இறந்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி