ஆப்நகரம்

20 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

மொத்தம் 20 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் -திமுக தலைவர் ஸ்டாலின்

Samayam Tamil 25 Oct 2018, 12:01 pm
திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Samayam Tamil stalin assemblhy


(மக்களவை தொகுதி பொறுப்பாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை!)

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளா்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளா்கள் கூட்டம் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் இடையே ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘எதிர்வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்று இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. மேலும், ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை நடைபெற்றது.

தற்போது 18 எம்எல்ஏ.,க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயக நெறிமுறைகள் போற்றப்பட வேண்டும். 18 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் மக்கள் பிரதிநிதியே இல்லாமல் உள்ளது. இப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பால் 18 தொகுதிகளிலும் பிரதிநிதி இல்லை. எனவே, மொத்தம் 20 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். 20 தொகுதிகளிலும் திமுக.,வுக்கு வாக்களிக்க ஆர்வமாக உள்ளார்கள்’.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அடுத்த செய்தி