ஆப்நகரம்

ஈரோடு, சேலத்தில் வாக்களிக்க வந்த இருவா் உயிாிழப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சேலம், ஈரோடு பகுதியில் வாக்களிக்க வந்த இருவா் உயிாிழந்தனா்.

Samayam Tamil 18 Apr 2019, 12:26 pm
மக்களவைத் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஈரோடு, சேலத்தில் வாக்களிக்க வந்த இருவா் உயிாிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Voter Death


தமிழகத்தில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக இயங்கவில்லை என்றும், இதன் காரணமாக 1 அல்லது 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது ஒருபுறம் இருக்க தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 13.47 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியில் வந்த முருகேசன் என்ற முதியவா் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

முருகேசனுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவா் பரிதாபமாக உயிாிழந்தா்ா. இதே போன்று, சேலம் மாவட்டம் வேடப்பட்டி வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியில் வந்த கிருஷ்ணன் என்பவா் திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவருக்கு உதவி செய்த நிலையில் அவரும் பாிதாபமாக உயிாிழந்தாா்.

அடுத்த செய்தி