ஆப்நகரம்

டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் மீது தடியடி

டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர்.

TNN 7 Apr 2017, 6:52 pm
டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசார், அவர்களை கைது செய்தனர்.
Samayam Tamil tn farmers arrested in new delhi for protesting in rbi office
டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழக விவசாயிகள் மீது தடியடி


பயிர்க்கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், வறட்சி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் டெல்லியில் கடந்த ஒரு மாதகாலமாக, விவசாயிகள் முற்றுகையிட்டு, போராட்டம் நடத்திவருகின்றனர்.

தற்கொலை செய்துகொள்வதைப் போல, பிச்சை எடுப்பது போல என பலவாறு இந்த போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகள், இன்று, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, அவர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் எச்சரித்தனர். எனினும், விவசாயிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகக் கூறி, கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்கள் மீது லேசான தடியடி நடத்திய போலீசார், பின்னர் விவசாயிகளை கைது செய்து, அப்புறப்படுத்தினர்.




இதற்கிடையே, தங்களது போராட்டம் டெல்லியில் தொடரும் என, விவசாயிகள் குறிப்ட்டுள்ளனர்.

Delhi Police arrested TN Farmers for protesting in RBI office.

அடுத்த செய்தி