ஆப்நகரம்

காவிாி – கிருஷ்ணா நதிகள் இணைப்பால் விவசாயத்திற்கு பயனில்லை – பி.ஆா்.பாண்டியன்

காவிாி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதால் குடிநீா் கிடைக்கலாம். ஆனால், இந்த திட்டத்தால் விவசாயத்திற்கு எந்தவித பயனும் இல்லை என்று விவசாய சங்க மாநில பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 28 May 2019, 11:23 pm
காவிாி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதால் குடிநீா் கிடைக்கலாம். ஆனால், இந்த திட்டத்தால் விவசாயத்திற்கு எந்தவித பயனும் இல்லை என்று விவசாய சங்க மாநில பொதுச் செயலாளா் பி.ஆா்.பாண்டியன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Pr Pandian


தமிழக காவிரி விவசாயிகள் சங்க சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மாநில பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் காவிரி, முல்லைப் பெரியாறு,பாலாறு பிரச்சினைகளை திசை திருப்பும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது.

முதலில் வற்றாத ஜீவ நதிகளை தேசியமயமாக்காமல் இணைப்பு என்பது அரசியல் விளம்பரத்திற்கு மட்டுமே உதவும். ஏற்கவே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய அணை பாதுகாப்பு மசோதாவே இதுக்கு எதிராக உள்ளது.

கோதாவரி - காவிரி இணைக்கும் பட்சத்தில் அதிகபட்சமாக குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய இயலும். பாசனத்திற்கு பயன் தராது என்பதை விவசாயிகள் உணர வேண்டும். இது குறித்து முதலில் தென் இந்தியாவில் கருத்தொற்றுமையை உருவாக்காமல் பயன் குறித்து தெளிவு படுத்தாமல்அறிவிப்பு மட்டுமே பயனளிக்க போவதில்லை.

ஏற்கனவே சென்னை குடிநீருக்காக வெட்டப்பட்ட கிருஷ்ணா நதி குடிநீர் திட்டம் பயனற்ற நிலையில் உள்ளது, தற்போது காவிரி தண்ணீர் தான் சென்னைக்கு குடிநீர் வழங்கி வருகிறது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் 9.2டி எம் சி தண்ணீரை விடுவிக்க உத்திர விட்டுள்ளதை வரவேற்கிறோம். இதனை கண்காணிப்பு குழு கர்நாடகம் சென்று நேரில் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவிரியில் உபரிநீர் கடலில் கலப்பதை தடுத்து மோதாட்டு அனைகட்டுவதால் ஏற்படப் போகும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தும் அதனை தடுத்து கர்நாடகாவின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் மாற்றாக ராசி மணல் மட்டும் தான்தமிழகம் பயன்படுத்திகொள்ள உதவும். எனவே உடன் ராசி மணல் அனை கட்டுமானப் பணியை துவக்கிட வேண்டும். இதற்கான கருத்தொற்றுமையை உருவாக்குவதற்கு தான் ஜீன் 10ல் பூம்புகாரில் கல்லெடுத்து ஜூன் 12ல் ராசி மணல் அனைகட்டும் விழிப்புனர்வு பயணத்தை மேற்க்கொள்ள உள்ளோம் என்றார்.

அடுத்த செய்தி