ஆப்நகரம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பூனையுடன் விவசாயிகள் போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பூனைகளுடன் கூடி போராட்டம் நடத்தினார்கள்.

TNN 28 Apr 2017, 2:29 pm
தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பூனைகளுடன் கூடி போராட்டம் நடத்தினார்கள்.
Samayam Tamil tn farmers protest in tanjore with cats
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பூனையுடன் விவசாயிகள் போராட்டம்


தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.

“பருவமழை பொய்த்தது, காவிரியில் நீர் வரத்து இல்லாதது, வரலாறு காணாத வறட்சி உள்ளிட்ட பல காரணங்களால் பயிர்கள் கருகிவிட்டன. பயிர்க்கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால், விவசாயிகளின் வீட்டில் இருக்கும் அடுப்புகளில் பூனை தூங்கிக்கொண்டிருக்கிறது. விவசாயிகள் மீது அக்கறையற்ற அரசும் தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று முழக்கமிட்ட அவர்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை புறக்கணித்தனர்.

அடுத்த செய்தி