ஆப்நகரம்

மீன், மீன் உணவு டோர் டெலிவெரி செய்யும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் மீன் விற்பனையை ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகளை மாநில அரசு முன்னெடுத்துள்ளது...

Samayam Tamil 24 Apr 2020, 12:25 am
சென்னையில் மீன்கள் வீட்டிற்கு வந்து டெலிவெரி செய்யப்படும் என்றும் பல மாவட்டங்களில் அரசே மீன் விற்பனையை எளிமைப்படுத்தும் என்றும் தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil மீன், மீன் உணவு டோர் டெலிவெரி செய்யும் தமிழ்நாடு அரசு!
மீன், மீன் உணவு டோர் டெலிவெரி செய்யும் தமிழ்நாடு அரசு!


தமிழ்நாட்டில் மீன் விற்பனையை எளிமைப்படுத்தும் நோக்கிலும், மீன்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதில் ஒரு கட்டமாக ஊரடங்கு நேரத்தில் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் மீன் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும் மக்கள் பயன்பெறும் வகையிலும் சில திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்


மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
அதிக புரதச் சத்து கொண்ட சுகாதாரமான மீன்கள் மக்களுக்கு நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் நடமாடும் கடைகள், சில்லறை மீன் விற்பனை அங்காடிகளில் மீன் விற்பனை அதிகரிக்கப்படும். குறிப்பாக இப்போதைய நேரத்தில் சென்னையில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மீன், மீன் உணவுகளை டெலிவெரி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தில் கட்டணமில்லா உணவு!

பொது மக்கள் www.meengal.com என்ற இணைய முகவரியிலும் 044-24956896 என்ற தொலைப்பேசி எண் வழியாகவும் மீன்களை ஆர்டர் செய்யலாம். அதேபோல் மீன்கள் விற்பனைக்காக meengal என்ற ஆப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மீன் விற்பனைக்காக 'இது நம்ம ஊரு மீன்கள்" என்ற வணிக அடையாளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி