ஆப்நகரம்

தமிழ்நாடு இபாஸ்: மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு; தனிமைப்படுத்துதல் கிடையாது!

இபாஸ் பெறுவதற்கான நடைமுறையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 27 Aug 2020, 9:20 pm
தமிழகத்தை பொறுத்தவரை கொரனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்த மாநில அரசு, வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்னப்பித்து இபாஸ் பெற்று செல்லும் நடைமுறையை அமல்படுத்தியது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனால், இந்த இபாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள் இருந்தும் முறையான ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இபாஸ் முறை மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, இபாஸ் முறையை எளிமைப்படுத்திய தமிழக அரசு, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து: முதல்வர் நடத்தும் ஆய்வு !

தமிழ்நாட்டில் இபாஸ் பெறுவது எளிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் முற்றிலும் ரத்து என்ற அறிவிப்பைத் தான் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மத்திய அரசு அறிவிப்பின்படி, புதுச்சேரியில் இபாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்திலும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து குறித்து முதலமைச்சர் பழனிசாமி விரைவில் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இபாஸ் பெறுவதற்கான நடைமுறையில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிற மாநிலங்களில் இருந்து வணிக ரீதியாக தமிழகம் வருவோருக்கு உடனடி இபாஸ் வழங்கப்படும். தமிழகத்திற்கு வந்த நாளிலிருந்து 3 நாட்களுக்குள் புறப்படுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது. தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள், திரைத்துறையினர், சட்டப் பணிகளுக்காக வருவோருக்கு இவை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி