ஆப்நகரம்

மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழக அரசு விளக்கம்

காவிரி மேலாண்மை ஆணைய நிர்வாக செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது என தமிழக பொதுப்பணித்துறை விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 29 Apr 2020, 8:16 pm
சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்க கடந்த 2018ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சமூக பரவலா..? சென்னையில் மட்டும் 94 ... இளம்பெண் பலி...

அதுதவிர கோதாவரி ஆற்று மேலாண்மை வாரியம், கிருஷ்ணா ஆற்று மேலாண்மை வாரியம், தேசிய நீர் தகவல் மையம் உள்ளிட்டவைகளும் மத்திய நீர்வளத்துறை அமைச்சக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கி வந்த காவிரி மேலாண்மை ஆனையத்தை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்துடன் இணைத்தது அதன் உரிமைகளை பாதிக்கும் என்பதால், இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாடு அரசு விளக்கம்


இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய நிர்வாக செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும், காவிரி நீர் ஆணையம், முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கை அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை எனவும் பொதுப்பணித்துறை விளக்கமளித்துள்ளது.

அடுத்த செய்தி