ஆப்நகரம்

விவசாயிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை

வறட்சி சூழல் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

TNN 30 Dec 2016, 2:21 am
சென்னை: வறட்சி சூழல் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
Samayam Tamil tn government negotiation with farmers today
விவசாயிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை


தமிழகத்தில் நிலவும் வறட்சி சூழல் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகல்லுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், வருவாய், வேளாண், உணவுத்துறை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிப்பது ,பயிர் இழப்பீடு மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

விவசாயிகளின் வாழ்க்கை மிக மோசமான துன்பத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விவசாய அமைப்பினரும், விவசாயத் தொழிலாளர் அமைப்பினரும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
TN government negotiation with Farmers today

அடுத்த செய்தி