ஆப்நகரம்

கல்லூரி மாணவர்களே பீ கூல், எக்ஸாம் டெண்ஷன் வேணாம்!

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் தொடர்பாக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 16 Apr 2020, 5:01 pm
கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தேர்வுகள் நடத்தப்படாமலிருந்தது. இந்நிலையில் இப்போதைய பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளை மூட அறிவுறுத்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

இந்த அறிவிப்பு சில மாணவர்களை பாதுகாத்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மட்டும் நடத்தி முடிக்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாகப் பல்லாயிரம் மாணவர்கள் இந்த பொதுத்தேர்வில் சில தேர்வுகளை எழுதவில்லை.

கொரோனா ஊரடங்கால் மன அழுத்தமா? அப்போ இது உங்களுக்கான செய்தி!

இந்த குளறுபடியைத் தொடர்ந்து 11, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதே வேளையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு இந்த பருவம் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இப்போது இதுத் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு அடுத்த பருவம் தொடங்கும்போது நடத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா: 22... 17... ரெட் அலர்ட் மாவட்டங்கள் உண்மையில் எத்தனை?

மேலும் அதில், "கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்து தமிழ்நாடு அரசு பின்னாட்களில் அறிவிக்கும்" எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள், பெற்றோர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

அடுத்த செய்தி