ஆப்நகரம்

கொரோனா: அடங்க மறுக்கும் தமிழர்கள்... தண்டனையை கடுமையாக்க வரப் போகிறது புதிய சட்டம்!

கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 25 Aug 2020, 8:05 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கம், நாடு முழுவதும் ஆறாம் கட்டமாக வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது நாடு முழுவதும் UNLOCK செயல்முறை தொடங்கியுள்ளது. அதன்படி, UNLOCK3 செயல்முறையின் அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றிவரும் மாநிலங்கள், தங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகளை அளித்துவருகின்றன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றை கொள்ளை நோயாக அறிவித்து பேரிடராகவும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தொற்று நோய்கள் சட்டம், 1897இல் ஷரத்து 2இன் படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதன் தொடர்ச்சியாக, குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 144இன் கீழ் உரிய நடவடிக்கைகளை எடுக்க அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சி தலைவர்களும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. பிரிவு 76ன் படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொற்று நோய் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்ட முதல்வர், இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு தொற்று பாசிட்டிவ்..! சென்னையில் குறையல...

எனினும், கொரோனா கட்டுப்பாடுகளை பலரும் மீறி வருகின்றனர். அரசு அறிவித்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பொது மக்கள் கடைபிடிப்பதில்லை என தெரிகிறது. இந்த நிலையில், கொரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தொற்றுநோய் சட்டத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வரும் எனவும் தெரிகிறது.

அடுத்த செய்தி