ஆப்நகரம்

குழந்தைகளைப் பாருங்கள் ஒருமணி நேரம்.. பெற்றோர்களுக்கு கல்வித்துறை கோரிக்கை

தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது செல்போன்கள் உள்ளிட்ட இன்னபிற சாதனங்களை விட்டு விட்டு, குழந்தைகளோடு ஒரு மணிநேரம் செலவிடவேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Samayam Tamil 13 Nov 2019, 7:39 pm
நாளை நவம்பர் 14ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது செல்போன்கள் உள்ளிட்ட இன்னபிற சாதனங்களை விட்டு விட்டு, குழந்தைகளோடு ஒரு மணிநேரம் செலவிடவேண்டும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Samayam Tamil GadgetFreeHour_Poster


குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதன் உலகளாவிய நோக்கம் வேறொன்றாக இருக்க தற்போது, பெற்றோர்களை குழந்தைகளின் பக்கம் கவனம் செலுத்த வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



தங்களது குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண்களைக் குவிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் , அவர்களுடன் கொஞ்சமாவது நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைப்பதில்லை. அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனியே ட்யூஷன் செல்வதை கௌரவம் என்றும் பெற்றோர்கள் நினைக்கிறார்கள் என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வேலைக்குச்செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுவதும் இல்லை. இதனால், குழந்தைகள் சொந்த வீட்டுக்குள்ளேயே தனியாக வளர்கிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு சாதனங்களற்ற மணி நேரம் ச்செயல்படுத்தப்பட இருக்கிறது.

நாளை மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் ஏதுமின்றி குழந்தைகளோடு நேரம் செலவழித்தபடி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த செய்தி