ஆப்நகரம்

இனவரலாற்றை அழிக்கும் கல்விக்கொள்கை... எதிர்த்ததற்கு நன்றி : சீமான்

ஒற்றைப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்

Samayam Tamil 3 Aug 2020, 2:30 pm
நாடு முழுக்க அமல்படுத்தப்பட்டுள்ள புதிய தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்று வருகின்றன.
Samayam Tamil seeman


இந்நிலையில், நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இதனை வரவேற்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் கல்விக்கொள்கையை எதிர்த்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவித்ததாவது, “புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்!

மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் தமிழ்நாடு முதல்வர்!

மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி