ஆப்நகரம்

"மானமிருந்தா, ஆட்சிய ராஜினாமா செய்யுங்க": துரை முருகன் கடும் விமர்சனம்..!

’அதிமுக அரசுக்கு மானம் இருந்தால், தங்களது ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 10 Apr 2017, 10:20 am
’அதிமுக அரசுக்கு மானம் இருந்தால், தங்களது ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என திமுக முதன்மை செயலாளர் துரை முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn government should resignsays durai murugan
"மானமிருந்தா, ஆட்சிய ராஜினாமா செய்யுங்க": துரை முருகன் கடும் விமர்சனம்..!


தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே நகர் இடைத்தேர்தலை , நேற்றிரவு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்தது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், எனவே அங்கு தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வாய்ப்பில்லை என்பதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது. இதனால் அந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பல்வேறு கட்சியினரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து, திமுக கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை முருகன் கருத்து தெரிவித்துள்ளார். “ ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இந்த அவமானம் ஏற்பட காரணமான தமிழக அரசுக்கு மானம் என்று ஒன்று இருந்தால், தங்கள் ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும்.” என காட்டமாக துரை முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

TN government should resign,says Durai Murugan

அடுத்த செய்தி