ஆப்நகரம்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருவிழா வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக ஆகஸ்ட் 25 முதல் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 23 Aug 2019, 8:11 am
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி, ஆகஸ்ட் 25 முதல் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!


நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், திருத்தலப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மொத்தம் 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மறுநாளான 8-ம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தர உள்ளனர். இந்நிலையில் பயணிகள் வசதிக்காக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள், வருகிற 25 முதல் திருவிழா நடைபெறும் வரை இயக்கப்படுகிறது.

சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்!!

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவினை முன்னிட்டு, இந்த ஆண்டும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னை, பெங்களூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து தேவைக்கேற்ப அதிநவீன மிதவைப் பேருந்துகள், இருக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மருத்துவம் படிக்கும் நான் வாழ்க்கையை நினைத்து பயப்படுகிறேன்... ஜோதிடர் கூறும் தீர்வு இதோ...

200 சிறப்பு பேருந்துகள், வருகிற 25-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 16 நாட்களுக்கு திருவிழா நடைபெறும் வரை இயக்கப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக நடைமுறையில் உள்ள இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா?

அடுத்த செய்தி