ஆப்நகரம்

நீட் தேர்வு அவசரச் சட்டம்: ஒப்புதல் தருமா மத்திய அரசு?

நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தின் வரைவு நாளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

TNN 13 Aug 2017, 4:01 pm
சென்னை: நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தின் வரைவு நாளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tn government to tomorrow submit ordinance to exempt state from neet for 1 year
நீட் தேர்வு அவசரச் சட்டம்: ஒப்புதல் தருமா மத்திய அரசு?


நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே, நீர் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போது, மீண்டும் தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Will tomorrow submit ordinance to exempt state from NEET for 1 year,thank Centre and PM for support : C Vijayabaskar,TN Health Minister pic.twitter.com/TVMeCk37fz — ANI (@ANI) August 13, 2017 இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் ஓராண்டுக்கு விலக்கு பெற தேவையான அவசரச் சட்ட முன்வரைவு நாளை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி