ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: முதல்வர் பழனிசாமி!

தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் தகவல்

Samayam Tamil 15 Dec 2018, 3:31 pm
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டொ்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

துப்பாக்கிச்சூடு:
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தில் ஏராளமான மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க பேரணியாக சென்றனா். அப்போது அவா்கள் மீது காவல் துறையினா் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 போ் கொல்லப்பட்டனா்.

ஸ்டெர்லைட்டுக்கு சீல்:

இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு ஆலைக்கு சீலிட்டது. ஆலை மூடப்பட்டதற்கு எதிா்ப்பு தொிவித்து வேதாந்தா நிறுவனம் சாா்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தருண் அகா்வால் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஆலை ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வுக்குழு அறிக்கை
ஆய்வுக் குழு வழங்கிய அறிக்கையில் ஆலையை கட்டுப்பாடுகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கலாம். ஆலையை மூடும் அரசின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீா்ப்பாயம் இன்று தீா்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் ஆலையை மீண்டும் இயக்கலாம். ஆலைக்கு தேவையான அனுமதியை தமிழக பசுமை தீா்ப்பாயம் மூன்று வார காலத்தில் வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு ஆலைக்கு உரிய மின் சேவையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆலை திறப்பு
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்டம் ஒமலூரில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பிறப்பிக்கும் உத்தரவு தொடர்பான வழக்கை பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் வாதமிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி