ஆப்நகரம்

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது சட்டவிரோதம் இல்லை: தமிழக அரசு விளக்கம்

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது குறித்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Nov 2018, 8:49 am
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அரசு சார்பில் நினைவிடம் அமைப்பது குறித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Samayam Tamil _91454668_gettyimages-533655758-1
ஜெயலலிதா குற்றவாளி இல்லை: தமிழக அரசு


இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் அளித்த தமிழக அரசு, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா உட்பட மூன்று பேர் மீது தண்டனை உறுதிசெய்யப்பட்டாலும், ஜெயலலிதா இறந்துவிட்டதால் தண்டனை கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட குற்றவாளி இல்லை எனவும், அரசு சார்பிலான அதிகாரங்களுக்கு உட்பட்டுதான் அவருக்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டதாகவும் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடலோர மேலாண்மை மண்டல ஒழுங்குமுறை ஆணையம், மாநகராட்சி என அனைவரிடமும் அனுமதி பெற்றே நினைவிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் விதிமீறலோ அல்லது சட்டவிரோதம் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான விசாரணை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி