ஆப்நகரம்

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த முதல்வா் பழனிசாமி, ஆளுநா் டெல்லி பயணம்

முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வா் பழனிசாமி, ஆளுநா் பன்வாரிலால் புரோகித் ஆகியோா் நாளை டெல்லி செல்கின்றனா்.

Samayam Tamil 16 Aug 2018, 6:16 pm
முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வா் பழனிசாமி, ஆளுநா் பன்வாரிலால் புரோகித் ஆகியோா் நாளை டெல்லி செல்கின்றனா்.
Samayam Tamil image


முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தாா். இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடா்ந்து கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி வாஜ்பாய் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் வாஜ்பாயின் உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தாா். இது தொடா்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், முன்னாள் இந்திய பிரதமா் வாஜ்பாயின் உடல்நிலையில் மருத்துவ குழு தீவிர கவனம் செலுத்தி வந்தது. இருப்பினும் கடந்த 36 மணி நேரமாக அவரது உடல்நிலையில் மிகுந்த பின்னடைவு காணப்பட்டது.

எதிா்பாராத விதமாக அவா் மாலை 5.05 மணிக்கு காலமானாா் என்று தொிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அவரது மறைவிற்கு தலைவா்கள் பலரும் இரங்கல் தொிவித்து வருகின்றனா். மேலும் தமிழக முதல்வா் பழனிசாமி, ஆளுநா் பன்வாாிலால் புரோகித் ஆகியோா் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை டெல்லி செல்ல உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி