ஆப்நகரம்

மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடுக்கு ஆளுநர் ஒப்புதல்..! உருவானது புதிய சட்டம்

சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததனால் புதிய சட்டம் அமலாகியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2020, 1:53 pm
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வுகள் முடிந்த பின்னரும் உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்ததோடு, அதுகுறித்து மத்திய அரசிடம் விவாதிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும் வந்தனர்.
Samayam Tamil நீட் உள் ஒதுக்கீடு


இந்நிலையில், ஆளுநர் வேண்டுமென்றே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுவதுடன், ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருவதற்கிடையே, “மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகும்” என்று ஆளுநர் பன்வரிலால் புரோஹித் பதிலளித்தார்.

உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக ஆளுநர் மனசாட்சியுடன் முடிவெடுப்பார் என உயர் நீதிமன்ற மதுரை கிளையும் கருத்து தெரிவித்தது. தொடர்ந்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த வருடமே அமல்படுத்துவோம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

7.5% இடஒதுக்கீடு அமல்: அடுத்த சரவெடியை வெடித்த தமிழக முதல்வர்!

இந்நிலையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித் கையெழுத்திட்டுள்ளார். மசோதா இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 45 நாட்கள் கழித்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை கேட்டறிந்த பின்னர் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலாகியுள்ளது.

அடுத்த செய்தி