ஆப்நகரம்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 May 2018, 7:06 pm
சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Banwarilal Purohit


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 100வது நாளாக தொடர்வதை ஒட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தடியடி, கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். நெருக்கடியான நேரத்தில் அமைதியை நிலைநாட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் உதகையில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, ஆளுநர் உதகை திரும்புகிறார்.

TN Governor Banwarilal Purohit condolences Tuticorin Sterlite protest death.

அடுத்த செய்தி