ஆப்நகரம்

நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்- காரணம் இதுதான்..!!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samayam Tamil 23 Oct 2018, 6:35 pm
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள சூழலில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை டெல்லி செல்கிறார்.
Samayam Tamil TN-Governor_2017
டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்


அதிமுக ஆட்சிக்கு எதிராக போர்கொடி தூக்கிய டி.டி.வி தினகரன் ஆத்ரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி ஆதரவு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வர வேண்டும் குற்றலாத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இன்று தாமிரபரணி மகாபுஷ்கரத்தில் புனித நீராடினார்.

இந்நிலையில் இது தொடர்பாக, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர்கள் வேலுமனி, கே.பி. முனுசாலி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

அதை தொடர்ந்து, தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. இரண்டு நாட்கள் அங்கு தங்கி, தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் பன்வாரிலால் புரோஹித், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச, பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்டுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி