ஆப்நகரம்

திருக்குறளுடன் ஜி20யை ஒப்பிட்ட தமிழ்நாடு ஆளுநர் ரவி!

திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்

Authored bySM Prabu | Samayam Tamil 16 Jan 2023, 1:54 pm
உலகப் புகழ்பெற்ற தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
Samayam Tamil ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி


அந்த வகையில், திருவள்ளுவர் தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழறிஞர்கள் திருவள்ளுவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பக்கத்தில், “பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை ஆளுநர் ரவி செலுத்தினார்.

திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று G20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை.” என்று பதிவிட்டுள்ளது.

ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை தற்போது இந்தியாவிடம் உள்ளது.
ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு - திக் விஜய் சிங் தகவல்!
ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இந்திய தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 கூட்டமைப்பின் முதலாவது உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் ஜனவரி 16 மற்றும் 17 தேதிகளில் புனேயில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி